உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 15 July 2016

இலங்கை தமிழருக்காய் சிங்களவனை நோக்கி....

கண்ணீர் நிறைந்த
ஈரமுகம் கண்டும் கருணையற்ற
கோரமுகம் கொண்டு
கொத்து குண்டினை வீசினாயடா.......
சிங்க கொடி புனைந்து
மனிதனை கடித்து குதறும்
மானம் கெட்ட ஓநாயடா.
நீ........

பச்சை குழந்தைகள் என்றும் பாராமல்
பயங்கர ஆயுதம் கொண்டு
பரண்டும் மிருகமே!...
உனக்கு பால் ஊட்டியது
தாயா?இல்லை பிணங்கள் தின்னும்
பேயா?.........
பிணக்குவியலில் இச்சை கொள்ளும்
பிசாசு கூட்டமே!....
கைகளை பின் கட்டி
கல்லால் அடிக்கும்
கோழைதனத்தின் கொடி தூக்கிகளே!

புத்தரின் பெயர் சொல்லி
சுடுகாட்டினையும் சுரண்டும்
புத்தி கெட்ட மனிதர்களே!..இனி
புகலிடம் கிடைக்காது உன் சமாதியில் சிறு
புல்லும் முளைக்காது......

என் தமிழ்
சுற்றங்கள் செய்த குற்றங்கள்தான் என்ன?
அன்றே
சுதந்திர காற்றை நீ
சுவாசிக்க தந்திருந்தால்
சுடுகின்ற ஆயுதங்களை
சுமந்திருக்க மாட்டோமடா!...

மறுக்கப்பட்ட நீதியுடன் உன்னால்
வெறுக்கப்பட்ட நாங்கள்
வெந்து தணிந்து வீழ்வோம் என்று
வீண் கற்பனை செய்தாயோ?....

மரங்களை வெட்டி விட்டோம் என்று
மகிழ்ச்சி கொள்ளாதே! -அதன்
விதைகள் விழுந்து விட்டன-பல
வீர மர(ற)ங்கள் விளைந்து விட்டன!!
விழுதுகள் உன்னை நெருக்கும் காலம்
விரைவில் வரும்! -அன்று என்
தமிழருக்கும் வானம்
விடியல் தரும்!!...........
                    - கவிஅன்பு

No comments: