உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday, 15 July 2016

நேசத்தை தேடுகிறேன்....

உண்மை
நேசங்களை தேடுகிறேன்
நியாய விலை கடையில்......
கலிகால மடியில் கள்ளி பால் குடித்து
நேசங்களும் இங்கே நீர்த்து போய்விட்டனவோ?....
உயிரை நேசிக்கும் மனம்
உருவம் பார்ப்பதில்லை-அழகு
உருவம் பார்க்கும் மனம்
உயிரை நேசிப்பதில்லை--இதில்
உண்மை எது பொய் எது நல்ல
உள்ளத்திற்கும் புரிவதில்லை....
பச்சோந்தி மனங்களில் நேசமெனும்
பாசங்களிங்கே பரிதவித்து வாடுகின்றன......
பால் மனமென்று நேசம் வைத்தால்
சுண்ணாம்பாய் மாறியது உள்ளத்தை
சுடுகிறதே வார்த்தைகளால்........
உண்மை நேசங்கள் உயிராய்
பழகும் பாசங்கள் -சுற்றும்
உலகில் உள்ளவனா?உண்மையாய்
தேடுகிறேன்.........
                      - கவிஅன்பு 

No comments: