உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 11 October 2018

உலக பெண் குழந்தைகள் தின கவிதை

பிறந்த நாடும்
பெண்பாலே !...
இனிதாய்-நாம்
பேசும் மொழியும்
பெண்பாலே!!....

தாங்கும் பூமியும்
பெண்பாலே-அழகு
ஓங்கும் இயற்கையதும்
பெண்பாலே....

பெண் குழந்தையே
பூமியின் வரம் !....
அவளின்றியும் உண்டோ
இப்பூமியில்  தரம் ?.....

மழலையாய் பெண்
பிறந்தால் மகிழ்வோம்!...
மானுடம் அவளால்
செழிக்குமென நெகிழ்வோம்!!....

கள்ளிப்பாலுக்கு தீ
வைப்போம் !
அவளுக்கு
கரும்பலகையில்
கல்வி போதிப்போம்!!.

மொட்டுக்களை
கசக்கும் - பாலியல்
மோசங்களை
ஒழிப்போம்!-பெண்
தேவதைகளுக்கும்
சமஉரிமை சமுதாயத்தில்
அளிப்போம் !!...
                -கவிஅன்பு

(தமிழ் ஒன் இந்தியா நாளிதழில் பிரசுரமான இக்கவிதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது  - website url)
https://tamil.oneindia.com/news/tamilnadu/international-day-the-girl-child-today-331765.html

No comments: