உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 October 2018

பிறந்தநாள் வாழ்த்து கவிதை -தம்பி அருளின் சகோதரிக்காக

பிறந்த நாளோ பன்னிரெண்டு !
பூக்களும் ரசிக்குமே சகோதரி
உன் அழகை கண்டு !!

ஓருயிராய் நீயும் பிறந்து
ஒப்பில்லா உதிரதானம் வழி
ஓராயிரம் உயிர்தனை காக்கின்ற
சிந்தனையுள்ள சிவப்பு சிநேகிதியே!

வறண்டுபோன புவி  நிலையின்
வளம்கொழிக்க மரம் வளர்த்து
பசுமை சிறந்து செழிக்கவேண்டி
பணியது செய்யும்- சமூக
பண்புள்ள சமத்துவ சகோதரியே

சீரற்ற பள்ளியின் தன்மையதை
சீரமைக்க விரும்பியே
வாநண்பா தோள்கொடு தந்த
வாஞ்சையுள்ள நற் சகோதரியே !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த தமிழ் மாதமோ புரட்டாசி !
பின்வரும் நாளெல்லாம்  இருக்கட்டும்
வாழ்வு சிறக்க கடவுளின் ஆசி !!

அக்டோபரில் பிறந்த
அருமையுள்ள  சகோதரிக்கு
அருளின் அன்பான பிறந்த வாழ்த்துக்கள்
     - கவிஅன்பு