உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday, 12 September 2014

காலை வணக்கம்

சூரிய கதிர்கள் தரும்
கதகதப்பான வெப்பத்துடனும்....
பாடும் பறவைகள் தரும்
பரவசமூட்டும் குரலோசையுடனும்....
மலரும் பூக்கள் தரும்
மனம்கவர் புன்னகையுடனும்....
வளர் மரங்கள் தரும்
இதமான தென்றலுடனும்....
பனித்துளியில் தோன்றும்
மென்மை ஸ்பரிசத்துடனும்...
அழகாய் படரட்டும்  காலை
மகிழ்ச்சி தொடரட்டும் இவ்வேளை...
                                - கவிஅன்பு







No comments: