உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 25 January 2019

குடியரசு தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல  தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள்  களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..

கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..

பாரதமாதா படத்தினை  வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும்  பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....

தியாகிகள் பெருமை நினைந்து தினம்
திண்ணையில் அமர்ந்து பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ்  உயர்த்துவதே தேசபக்தி !.....

இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே 
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..
 - துள.கவிஅன்பு






















No comments: