உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 29 January 2019

மரம் வளர்ப்போம் -கவிஅன்பு

ஒளிச்சேர்க்கை வழியே-நல்
உணவினை உண்டாலும்
பிறப்பில் இருந்து இறப்புவரை
ஓய்வற்று உனக்காய்,
புகையழுக்கு,தூசியினை தின்றே
புதைந்து மண்ணில் மடிகிறோம்..
ஆனாலும் ஏனோ - எமை
ஆதரிக்க இயலாமல்
அன்னையாகிய மரங்களை
அருமை தெரியாமல் கொல்கிறாயே!..
மதி கெட்டுப்போன மானிடனே!
பேசியது இலைகள்..

மரங்களை வீழ்த்தும்போதெல்லாம்
மானிடமும் வீழ்ந்து போகிறது !
-கவிஅன்பு


No comments: