உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 22 January 2019

பொங்கல் பாடல் - Pongal song - Pongal kavithai

வந்தது தைத் திங்களம்மா!..
தமிழருக்கோர் பொங்கலம்மா!!..
தரணியெல்லாம் வாழும் இனம் !..
தமிழனுக்கே இது நல்ல தினம்!!.. (வந்தது)

புதியன சேர்த்து பழசு மறக்கும் முதல் நாள் போகியே !..
கவலைகள் களைந்து மகிழ்வோம் மனசும் புதிதாய் ஆகியே !!..
புதுப்பானை மஞ்சள் கட்டி புத்தரிசி வெல்லந்தான்!...
புதுப்பொங்கல் பொங்கும் மறுநாள் மனசும் கூட துள்ளும்தான்!!..
உழவரை நினைப்போம் !..உறவினை அழைப்போம்!!.....
கரும்பினை சுவைப்போம் !..கவலைகள் மறப்போம் !!..
இந்தென்றும் க்ரிஸ்ட்டினென்றும் முஸ்லிமென்றும் கூறாமல்....
தமிழனாய் கொண்டாடுவோம் வேறுபாடு பாராமல்....

வந்தது தை த் திங்களம்மா
தமிழருக்கோர் பொங்கலம்மா
தரணியெல்லாம் வாழும் இனம்
தமிழனுக்கே இது நல்ல தினம்

மாடுகள் அலங்கரித்து மூன்றாம் நாள் மணி கட்டு
மாட்டோடு  வீரம் பழக இருக்கு பாரு ஜல்லிக்கட்டு
விவசாயம்,இயற்கையென்று வியந்து வணங்கும் நாளுதான் !..
தரம் பிரிச்சு வச்ச தமிழன் உலகில் சிறந்த ஆளுதான் !!..
வள்ளுவனும் போல புலவனும் யாரு ?..
அவருக்கு தினமும் இருக்குது பாரு. ...
சாதி மதம் மறந்து பொங்கலத்தான் கொண்டாடு!
சமத்துவம் தந்தான் தமிழன் என்று நீயும் பண்பாடு !!....

வந்தது தை த் திங்களம்மா
பொங்குது பார்  பொங்கலம்மா..
தரணியெல்லாம் வாழும் இனம்
தமிழனுக்கே இது நல்ல தினம் !!
பொங்கல் வாழ்த்துகளுடன்
          - துள.கவிஅன்பு


No comments: