உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 29 January 2019

கண் தானம் கவிதை-கவிஅன்பு

கணினி வல்லுனரா நீங்கள்
கண நிமிடம் கண்மூடி - கணினியை 
கையால் இயக்கி பாருங்களேன் !

கட்டிட பணியாளரா நீங்கள்
கண்கள் சிறிது மூடிவிட்டு-சிறு
கற்களை நகர்த்தி பாருங்களேன் !

பெரு,சிறு வியாபாரியா நீங்கள்
பொறுமையாய்  கண் மூடி - சில
பொருள் கொடுத்து பாருங்களேன் !

கடமைஉணர்வான அதிகாரியா நீங்கள்
கண்கள் மெல்ல மூடிவிட்டு - சிறிது
கையொப்பம் இட்டு பாருங்களேன் !

காடு,தோட்ட  விவசாயியா நீங்கள்
கருவிழி அது  பாராமல் - கொஞ்சம்
களை எடுத்துத்தான்  பாருங்களேன் !

கருத்து,பதிவிடும்  முகநூல்வாசியா நீங்கள்
கண் கொஞ்சம் திறக்காமல்-இரு
கைகளால் எழுதித்தான் பாருங்களேன் !

கண்பார்வையற்ற மனிதரின் - கொடுங்
கடின வாழ்க்கையது  புரியும்! ...
கண்தானத்தின் அவசியம் - மன 
கருத்துக்கும் அப்பொழுதுதான்  தெரியும்  !
-கவிஅன்பு




No comments: