உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 31 August 2014

கற்பனை காதலியின் காலைநினைவு

கண்விழித்து பார்க்கும் காலை நேரம்
பறவைகளின் சப்தத்தின் ஊடே - என்னுள்
அழகாய் எட்டிப் பார்க்கும் அன்பு
காதலியுன் அழகிய நினைவுகள் .......

மௌனமாக உறக்கம் மயக்கம் தெளிந்து
கதிரவஒளியில் கலைந்து செல்லும் வேளையில்
மனக்கண்ணில் தெரியும் மங்கையும் நீதானடி
மயக்கும் காதலியே!...
எழிலான  உன் நினைவலை எழும்பும்
என் மனமும் ஒரு ஆழியே!!

சுடர்விடும் சூரிய ஒளி பூமியை
சுற்றி வரும் நேரத்தில் ! காதலிநீ
இருக்கிறாயடி என்  இதயத்தின் ஓரத்தில்!!
சந்தோஷ புன்னகை காட்டி....
உன் அன்பு கரங்களை நீட்டி....
ஆம் உனையே சுற்றிவரும் மனம்!
 உன்னினைவால் எனக்கு இன்று
நல்ல தினம்!!

மலர்கள் தன்னிதழை  விரித்து
மகிழ்ச்சியுடன் தலையாட்டும்- காதலி
உன் நினைவுகள் மட்டும்தானடி
எனக்குள் மகிழ்ச்சி ஊட்டும்.....

ரோஜா நீயாக இருந்தாலும்
பறிக்கப்படுவது என் மனம்தான் - ஆம்
அழகிய ரோஜாவாய் சிரிக்கிறாய்
அன்புகாட்டி இதயத்தை பறிக்கிறாய்.....

உன்பேச்சின்  இதமான மென்மை பனித்துளி...
உன்பேச்சின் இதமான உணர்வு தென்றல்.....
உன்னழகிய இதயத்தின் கதவுகள் சூரியஒளி...
உன்இன்முகம் நான்காணும் நாளது பௌர்ணமி.....

சுடும் பாலைவனத்தில் இருந்த எனக்கு
குளிரும் சோலைவனத்தில் இடம் கொடுத்தாய்...
இனிக்க இனிக்க பேசியென் மனதையும் எடுத்தாய்...
தென்றலுக்கு அடிப்படை மரம்!
காதலியுன் உறவுதானடி கடவுள்
எனக்களித்த வரம்!!
                           -கவிஅன்பு

No comments: