உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 3 August 2014

நண்பர்கள் தின நல்வாழ்த்து















நேரம்போக பேசி பிரியும்
நிமிட நட்பு வேண்டாம் !...
தூரம் இருந்தாலும் நெஞ்சம்
துடிக்கும் நட்பே வேண்டும் - மன
காயங்களை ஆறுதல் சொல்லி ஆற்றவும்...
துன்பவாழ்வில் உடனிருந்து கொஞ்சம் மாற்றவும்......
நல்லதோர் நட்பே நாளும் வேண்டும் ....

அன்பு செலுத்துவதில் அன்னையாய்
அக்கறை காட்டுவதில் தந்தையாய்
அதட்டி திருத்துவதில் ஆசிரியராய்
அழகானதோர் நட்பே அனுதினமும் வேண்டும்..

எழுத்து பிழைகள் நிறைந்த
என் வாழ்வெனும் ஏட்டை
எடுத்து சொல்லி திருத்தும்
எழிலான நட்பே என்றும்  வேண்டும்...
பிம்ப நிலவாய் பின் வருவதை விட
நிஜ விண்மீனாய் நிலைத்து வரும்
போலியற்ற  நட்பே புனிதமாய் வேண்டும்....

No comments: