உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday, 14 August 2014

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
















மீளாத நிலையில் மீனவர் பிரச்சினை...
கைவிடும் நிலையில் கச்சத்தீவு பிரச்சினை...
காலமெல்லாம் தொடரும் காவிரி பிரச்சினை..
முன்னேறி பதுங்கும் முல்லைபெரியார் பிரச்சினை..
இனத்தை அழித்த ஈழத்தமிழர் பிரச்சினை....
இருந்தாலும் நானுமொரு இந்திய(தமிழ)ன்....
சுவாசிக்க மூச்சுரிமை!போராட பேச்சுரிமை!!...
சும்மா வந்ததல்லவே சுதந்திரம்!!....
வாஞ்சி முதல் வஉசி வரை பெற்ற
துன்பத்தை யோசிப்போம்!..
இனமொழி  வேறுபாடு களைந்து
இந்தநாளை நேசிப்போம்!!....
அகன்றது அன்னியரின் தந்திரம்
அல்லல்பட்டு கிடைத்ததே சுதந்திரம்...
                                   -கவிஅன்பு

No comments: