உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 23 October 2018

அப்பாவான நண்பருக்கு அன்பு வாழ்த்து

பூமிப்பந்தை
அழகாக்க 
பூந்தளிர் ஓன்று
பிறந்ததே !

உங்கள்
புன்னகை மேலும்
விரிவாக்க
புதிய நிலவொன்று
வந்ததே !.....

பெரும்பாதம் நான்கு
பதிந்த வீட்டில்
சிறு பாதம் பதித்து
வாழ்வை சிறப்பாக்க
சிறு மழலையாய்
சித்திரம் ஓன்று
உதித்ததே!....

பத்து மாத
காத்திருப்பின்
பலனாய்
பௌர்ணமி நாளின்று
பனித்துளியும்
தோன்றியதே!

தேவதையின் வரவு
தெவிட்டாத மகிழ்வு
அப்பா பதவி பெற்ற
அன்பு நண்பருக்கு
அழகான வாழ்த்துகள்...
 - கவிஅன்பு


No comments: