உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 October 2018

கண்தானம் கவிதை

 உதிர்ந்த இலைகள்  கூட
 உரமாகி வளமாக்குகிறது
 உயிர்கொடுத்த மண்ணை !
 உதிரமது ஓடும் உயிர்
 கொண்ட மனிதர் நாம்
 வீணாக்கலாமா-நம்
 விலைமதிப்பற்ற கண்ணை !!
 அய்யோ பாவமென்று
 பரிதாபம் பார்த்து
 கடந்து செல்லாமல் 
 பார்விட்டு மறைந்த பின்னும்
 பார்ப்பதற்கு கண் தந்து
 பார்வையற்ற இருவருக்கு
 வெளிச்சமாய்
 கிடந்து செல்வோம்...
     - கவிஅன்பு 


No comments: