உதிர்ந்த இலைகள் கூட
உரமாகி வளமாக்குகிறது
உயிர்கொடுத்த மண்ணை !
உதிரமது ஓடும் உயிர்
கொண்ட மனிதர் நாம்
வீணாக்கலாமா-நம்
விலைமதிப்பற்ற கண்ணை !!
அய்யோ பாவமென்று
பரிதாபம் பார்த்து
கடந்து செல்லாமல்
பார்விட்டு மறைந்த பின்னும்
பார்ப்பதற்கு கண் தந்து
பார்வையற்ற இருவருக்கு
வெளிச்சமாய்
கிடந்து செல்வோம்...
- கவிஅன்பு
No comments:
Post a Comment