உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday, 15 October 2018

கண்தானம் கவிதை

மூன்றாம் கண்
 என்பது சற்று 
 நீளமான ஒரு பொருள்.....
 கைகள் தாங்கி நிற்கும்
 ஒளியற்ற பொருள்....
 நடக்கையில் அடிக்கடி
 சப்தம் எழுப்பும் ....
 ஓரடி தூரம் மட்டுமே
 உணர்வை காண்பிக்கும்....
 ஆம் ! இருகண்ணில்
 பார்வை அற்றவருக்கு
 மூன்றாம் கண் என்பது
 ஒரு கை பிடிக்கும்
 கைத்தடிதானே தவிர
 இரு கை பிடிக்கும்
 ஒளிப்படக்கருவி(camera)அல்லவே !
 கண்தானம் செய்வோம்
 இந்நிலை  மாறவே !!
-கவிஅன்பு

No comments: