உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 15 July 2016

ஓடி வா என் செல்லகுட்டி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பவ் பவ் நாய்குட்டி - இங்க
பாய்ந்து வா நாய்குட்டி....
பிஸ்கட் தரேன் நாய்குட்டி-என்
பின்னால் வா நாய்குட்டி....
கொரைக்காத நாய்குட்டி-உனக்கு
கொய்யா தரேன் நாய்குட்டி...
எழுந்து வா நாய்குட்டி - நல்லி
எலும்பு தரேன் நாய்குட்டி...
முழிக்காத நாய்குட்டி - திங்க
முறுக்கு தரேன் நாய்குட்டி....பார்வையில
பயம் காட்டாத நாய்குட்டி - நொறுக்கு
பகோடா தரேன் நாய்குட்டி....
கத்தாத நாய்குட்டி-இனிப்பான
கரும்பு போன்ற நாய்குட்டி...நீ
எங்க வீட்டு நாய்குட்டி வேலைக்கு உன்னை
ஏவ மாட்டேன் நாய்குட்டி....
பஞ்சு மேனி நாய்குட்டி - என்மேல
பாசமுள்ள நாய்குட்டி...மனசுல
நஞ்சு இல்லா நாய்குட்டி - நீ
நான் வளர்க்கும் நாய்குட்டி...
பிரியாணி சூட செஞ்சு -உனக்கு
பிரியமா போடுவேன்...
சாப்பிடாம நீ இருந்தா - மனசு
சங்கடத்துல வாடுவேன்..
அழகான என் நாய்குட்டி - குணத்துல
அன்பான என் நாய்குட்டி...
பழகுனா போதும் என் நாய்குட்டி
பக்கதுல வந்து வாலாட்டும்...
உறவுக்கார நாய்குட்டி - இரவில்
உசுரை காக்கும் நாய்குட்டி
நல்ல புள்ள நாய்குட்டி - இது
நான் வளர்க்கும் நாய்குட்டி...
ஓடி வா நாய்குட்டி - வீட்டுக்கு
ஒண்ணா போகலாம் நாய்குட்டி ...
பவ் பவ் நாய்குட்டி - இங்க
பாய்ந்து வா நாய்குட்டி..
              - கவிஅன்பு

சின்ன வயசுல தோ தோ நாய்குட்டி துள்ளி வா நாய் குட்டி நு பாடல் படிச்சு இருப்போம்..அந்த ராகத்துல படிச்சா சுவையா இருக்கும்னு நெனைக்கிறேன்.. :)
--எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை --

No comments: