உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 4 July 2016

உனக்காய் நான் இருப்பேன்

விழிமூடி நீ தூங்க
விசிறியாக நான் இருப்பேன் !
மொழி பேசி நீ சிரிக்க
தமிழாக தான்  இருப்பேன் !!
உண்மையாய் நேசம் காட்டும்
உறவாய் நான் இருப்பேன் !
உனக்கொன்று நேர்ந்தால் மண்ணில்
உயிரற்று சாய்ந்து இருப்பேன்!!
உன் கன்னத்தில் என் முத்தங்கள்
அது காமத்தை சொல்லாது !
என் எண்ணத்தில் உன் நினைவுகள்
அது என்றும் எனைவிட்டு செல்லாது !!
                                  -கவிஅன்பு

No comments: