உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday 22 June 2016

இணைய நட்பு

பள்ளிகூடத்தில் உன்னுடன்
               படிக்கவில்லை நான்....
பக்கத்து வீட்டிலும் உன்னை
               பார்த்ததில்லை  நான்...
சொந்த ஊரில் உன்னுடன்
               சுற்றியதில்லை நான்....
கல்லூரியில்  உன்னுடன்
                கற்கவில்லை  நான்...
பயணத்தில் கூட  உன்னுடன்
               பழகியதில்லை நான்...
அலுவலகத்திலும்  உன்னை
              அருகே கண்டதில்லை நான்...
எங்கோ நீயிருக்க..எங்கோ நான்..,...
            இணையத்தில் பார்த்து
இனிதாய் நாம்  பழகினோம்
            முழுதாய் புரிந்து கொண்ட
முழுமதி நட்பாய் மாறி
               இன்றுயென் மூச்சுடன்
கலந்து விட்டாயடி...
                                        -கவிஅன்பு

No comments: