உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 15 July 2016

எங்கே போற மனசே?

எங்கே போற மனசே? நீ
எங்கே போற..
என்னை விட்டு கடந்து அவளை பார்த்து
நீ செல்கிறாய்...
நான் சொல்லும் வார்த்தை கேட்காமல்
என்னை நீயே வெல்கிறாய்...
ஓ என் மனசே !
பாறை மேல படுத்து இருந்த நீ
பனித்துளியை தேடுகிறாய்....
சூரியனாக வலம் வந்த நீ
சுடர் நிலவ தேடுகிறாய்....
ஓ மனசே!
கடலுக்குள் போகாத காட்டாறு போல
கண்டபடி போற உனக்கு
கடிவாளம் போட்டவ யாரு? திமிரால
நிழலுக்கும் ஒரு சாலை போட்ட உனக்கு
நித்திரைய கெடுத்தவ யாரு?
ஓ மனசே!
எங்க போற நீ என்னை விட்டு தள்ளி..
சீரிய பாயும் புலி இப்போ
சிக்கியது பதுங்கு குழி ..
வேணாம் சொன்ன கேளு
வலிக்க போகுது உன் காலு
மனசே ஓடாத நில்லு..அவளை பார்த்து
மயங்காம நில்லு ..
பாக்காம போறவள பாக்குறதுக்கு என்கிட்ட
கேக்காம போறியே மனசே.....
எங்க போற மனசே..எங்க போற...
                    - கவிஅன்பு

(எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை --)

No comments: