உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 15 July 2016

இலங்கை தமிழருக்காய் சிங்களவனை நோக்கி....

கண்ணீர் நிறைந்த
ஈரமுகம் கண்டும் கருணையற்ற
கோரமுகம் கொண்டு
கொத்து குண்டினை வீசினாயடா.......
சிங்க கொடி புனைந்து
மனிதனை கடித்து குதறும்
மானம் கெட்ட ஓநாயடா.
நீ........

பச்சை குழந்தைகள் என்றும் பாராமல்
பயங்கர ஆயுதம் கொண்டு
பரண்டும் மிருகமே!...
உனக்கு பால் ஊட்டியது
தாயா?இல்லை பிணங்கள் தின்னும்
பேயா?.........
பிணக்குவியலில் இச்சை கொள்ளும்
பிசாசு கூட்டமே!....
கைகளை பின் கட்டி
கல்லால் அடிக்கும்
கோழைதனத்தின் கொடி தூக்கிகளே!

புத்தரின் பெயர் சொல்லி
சுடுகாட்டினையும் சுரண்டும்
புத்தி கெட்ட மனிதர்களே!..இனி
புகலிடம் கிடைக்காது உன் சமாதியில் சிறு
புல்லும் முளைக்காது......

என் தமிழ்
சுற்றங்கள் செய்த குற்றங்கள்தான் என்ன?
அன்றே
சுதந்திர காற்றை நீ
சுவாசிக்க தந்திருந்தால்
சுடுகின்ற ஆயுதங்களை
சுமந்திருக்க மாட்டோமடா!...

மறுக்கப்பட்ட நீதியுடன் உன்னால்
வெறுக்கப்பட்ட நாங்கள்
வெந்து தணிந்து வீழ்வோம் என்று
வீண் கற்பனை செய்தாயோ?....

மரங்களை வெட்டி விட்டோம் என்று
மகிழ்ச்சி கொள்ளாதே! -அதன்
விதைகள் விழுந்து விட்டன-பல
வீர மர(ற)ங்கள் விளைந்து விட்டன!!
விழுதுகள் உன்னை நெருக்கும் காலம்
விரைவில் வரும்! -அன்று என்
தமிழருக்கும் வானம்
விடியல் தரும்!!...........
                    - கவிஅன்பு

நேசத்தை தேடுகிறேன்....

உண்மை
நேசங்களை தேடுகிறேன்
நியாய விலை கடையில்......
கலிகால மடியில் கள்ளி பால் குடித்து
நேசங்களும் இங்கே நீர்த்து போய்விட்டனவோ?....
உயிரை நேசிக்கும் மனம்
உருவம் பார்ப்பதில்லை-அழகு
உருவம் பார்க்கும் மனம்
உயிரை நேசிப்பதில்லை--இதில்
உண்மை எது பொய் எது நல்ல
உள்ளத்திற்கும் புரிவதில்லை....
பச்சோந்தி மனங்களில் நேசமெனும்
பாசங்களிங்கே பரிதவித்து வாடுகின்றன......
பால் மனமென்று நேசம் வைத்தால்
சுண்ணாம்பாய் மாறியது உள்ளத்தை
சுடுகிறதே வார்த்தைகளால்........
உண்மை நேசங்கள் உயிராய்
பழகும் பாசங்கள் -சுற்றும்
உலகில் உள்ளவனா?உண்மையாய்
தேடுகிறேன்.........
                      - கவிஅன்பு 

எங்கே போற மனசே?

எங்கே போற மனசே? நீ
எங்கே போற..
என்னை விட்டு கடந்து அவளை பார்த்து
நீ செல்கிறாய்...
நான் சொல்லும் வார்த்தை கேட்காமல்
என்னை நீயே வெல்கிறாய்...
ஓ என் மனசே !
பாறை மேல படுத்து இருந்த நீ
பனித்துளியை தேடுகிறாய்....
சூரியனாக வலம் வந்த நீ
சுடர் நிலவ தேடுகிறாய்....
ஓ மனசே!
கடலுக்குள் போகாத காட்டாறு போல
கண்டபடி போற உனக்கு
கடிவாளம் போட்டவ யாரு? திமிரால
நிழலுக்கும் ஒரு சாலை போட்ட உனக்கு
நித்திரைய கெடுத்தவ யாரு?
ஓ மனசே!
எங்க போற நீ என்னை விட்டு தள்ளி..
சீரிய பாயும் புலி இப்போ
சிக்கியது பதுங்கு குழி ..
வேணாம் சொன்ன கேளு
வலிக்க போகுது உன் காலு
மனசே ஓடாத நில்லு..அவளை பார்த்து
மயங்காம நில்லு ..
பாக்காம போறவள பாக்குறதுக்கு என்கிட்ட
கேக்காம போறியே மனசே.....
எங்க போற மனசே..எங்க போற...
                    - கவிஅன்பு

(எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை --)

கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்

கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்
காட்டுவழி போற என் தோகைமயிலே
கண்ணால பேசுற என் கருங்குயிலே
தளுக்கி மினுக்கி நீ நடக்கையில
தள்ளாடுதடி மாமன் மனசு அது
உங்கிட்ட வழுக்கி விழுந்து போகுதடி
வார்த்தை பேசாம ஊமையாவும் ஆகுதடி..

சிவத்த சிமிக்கி போட்ட கருத்தபுள்ள
சிக்குன்னு சடை முடிஞ்ச சின்ன புள்ள
பூசேலை கட்டி போறவளே நான் சொல்லாம
என் மனசுக்குல வாரவளே..

மண்ணுல மெதுவா நீ பாதம் பதிச்ச..... என்
மனசுக்குல ஒன் நெனப்ப மருதாணியா ஏன் வச்ச..
உச்சிவகிடு பார்த்துட்டு உருகுலைஞ்சு போனேன்
உன்னை நெனச்சு பொலம்புற பைத்தியம் ஆனேன்..

நிலத்தை பாத்து நடக்குரவளே மேல
நிமிந்து கொஞ்சம் பாரடிம்மா - உன்னைநெனச்சு
ஏங்கி போயி நான் இருக்கேன் - அருவாள விட்டுடு
கையாலயே நாத்து அருக்கேன்....அதை
ஆத்தா பாத்துட்டு அடிக்க வாறா
அப்பன் பார்த்துட்டு பிடிக்க வாரார்....

உன் கண்ணால அடிச்ச காதல் அடியில...
என்னால நெல் அறுக்க முடியல .....
கொஞ்சம் கொஞ்சமா உசுரை எடுத்தவளே
தூங்க முடியாம என் நித்திரைய கெடுத்தவளே..
அறுவடை நெல்லு மாறி நீ குனிஞ்சது போதும்
என் ஆத்தாளை பார்த்து பணிஞ்சது போதும்

வயக்காட்டுல ஓடி திரியலாம் வாடி புள்ள... அதுல
கெடைக்கிற சந்தோசத்தை எப்படி நான் சொல்ல...
கை பிடிக்காம நீ போன கலங்கிடுவேன் நானு - என் நெலம அப்புறம் தரைல தள்ளாடுற மீனு....

கண்ணுக்குள்ள இருக்குற கருத்த மேனிக்காரி
நெஞ்சுக்குள்ள போன நெத்திலி உடம்புக்காரி - உன்
கொலுசொலி கேக்கும்போது தன்னால
கொஞ்சி நான் பேசுறேன் ..
ஈட்டியா நீ பாக்கும்போது உன் முன்னால
கொஞ்சம் நான் கூசுறேன்...

இப்போ நான் இருக்குறேன் உன் மேல
பைத்தியம் முத்தி - நெறைய சொல்லிட்டே
இருக்கலாம் உன்னை பத்தி...
ரெட்டை சடை போட்டவளே
மாமா நீயான்னு கேட்டவளே
சீக்கிரம் வாடி சிங்கார பொண்ணே
கல்யாணத்த பண்ணிக்கலாம்
கருத்தா ரெண்டு குழந்தை பெத்துக்கலாம்
கருப்பாயி உன்னை பார்த்து இருக்கேன்
கண்மாகரையில காத்து இருக்கேன்..

- கருத்த புள்ளைக்காக என் கானம் தொடரும்
                                          - கவிஅன்பு
(எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை )















ஓடி வா என் செல்லகுட்டி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பவ் பவ் நாய்குட்டி - இங்க
பாய்ந்து வா நாய்குட்டி....
பிஸ்கட் தரேன் நாய்குட்டி-என்
பின்னால் வா நாய்குட்டி....
கொரைக்காத நாய்குட்டி-உனக்கு
கொய்யா தரேன் நாய்குட்டி...
எழுந்து வா நாய்குட்டி - நல்லி
எலும்பு தரேன் நாய்குட்டி...
முழிக்காத நாய்குட்டி - திங்க
முறுக்கு தரேன் நாய்குட்டி....பார்வையில
பயம் காட்டாத நாய்குட்டி - நொறுக்கு
பகோடா தரேன் நாய்குட்டி....
கத்தாத நாய்குட்டி-இனிப்பான
கரும்பு போன்ற நாய்குட்டி...நீ
எங்க வீட்டு நாய்குட்டி வேலைக்கு உன்னை
ஏவ மாட்டேன் நாய்குட்டி....
பஞ்சு மேனி நாய்குட்டி - என்மேல
பாசமுள்ள நாய்குட்டி...மனசுல
நஞ்சு இல்லா நாய்குட்டி - நீ
நான் வளர்க்கும் நாய்குட்டி...
பிரியாணி சூட செஞ்சு -உனக்கு
பிரியமா போடுவேன்...
சாப்பிடாம நீ இருந்தா - மனசு
சங்கடத்துல வாடுவேன்..
அழகான என் நாய்குட்டி - குணத்துல
அன்பான என் நாய்குட்டி...
பழகுனா போதும் என் நாய்குட்டி
பக்கதுல வந்து வாலாட்டும்...
உறவுக்கார நாய்குட்டி - இரவில்
உசுரை காக்கும் நாய்குட்டி
நல்ல புள்ள நாய்குட்டி - இது
நான் வளர்க்கும் நாய்குட்டி...
ஓடி வா நாய்குட்டி - வீட்டுக்கு
ஒண்ணா போகலாம் நாய்குட்டி ...
பவ் பவ் நாய்குட்டி - இங்க
பாய்ந்து வா நாய்குட்டி..
              - கவிஅன்பு

சின்ன வயசுல தோ தோ நாய்குட்டி துள்ளி வா நாய் குட்டி நு பாடல் படிச்சு இருப்போம்..அந்த ராகத்துல படிச்சா சுவையா இருக்கும்னு நெனைக்கிறேன்.. :)
--எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை --

கன்னக்குழி கவிதை


மயக்கமூட்டும் மங்கை



கடிகாரம் கவிதை


பெண்ணின் வலி

மாதத்தில் மூன்று நாள்தான்
எனக்கு உடலில் வலி ..
மாதத்தில் முப்பது நாளும்
உன்னால்தான் எனக்கு
உள்ளத்திலும் வலியடா...
மதுவை குடித்து
மனதில் சந்தேகம் கொண்டு
அடிக்கும் கணவனே......
               - கவிஅன்பு 

படித்ததில் ரசித்தது

மழைபெய்து விட்டு போனாலும்
அதன் தடம்
மண்ணில் ஈரமாகவும் இருக்கும்...
மரத்தில் தண்ணீர் துளிகளாகவும்
இருக்கும் - அது போல
நீ பேசி முடித்து விட்டு
போன பிறகும் உன் நினைவுகள்
என்னுள்  இருக்கும் ..

படித்ததில் ரசித்தது

நான் உன்
இமைகளுக்குள் இருக்கும்
கரு விழியாக
மாறி விட்டால் என்ன?..
என்றே தோன்றுகிறது......
ஏனென்றால்
நீ போகும் இடமெல்லாம்
நீ பார்க்கும் இடமெல்லாம்
உன்னுடன் இருப்பேனே நான் !.......

படித்ததில் ரசித்தது...


நாம் இருவரும்
கண் இமைகளாக இருந்தால்..
நீ மேல் இமை ..
நான் கீழ் இமை..
ஒவ்வொரு நொடியும்
உன்னை நானும்
என்னை நீயும்
தீண்டிக்கொண்டே இருப்போம்.
.

Monday 4 July 2016

உனக்காய் நான் இருப்பேன்

விழிமூடி நீ தூங்க
விசிறியாக நான் இருப்பேன் !
மொழி பேசி நீ சிரிக்க
தமிழாக தான்  இருப்பேன் !!
உண்மையாய் நேசம் காட்டும்
உறவாய் நான் இருப்பேன் !
உனக்கொன்று நேர்ந்தால் மண்ணில்
உயிரற்று சாய்ந்து இருப்பேன்!!
உன் கன்னத்தில் என் முத்தங்கள்
அது காமத்தை சொல்லாது !
என் எண்ணத்தில் உன் நினைவுகள்
அது என்றும் எனைவிட்டு செல்லாது !!
                                  -கவிஅன்பு