உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 31 August 2014

கற்பனை காதலியின் காலைநினைவு

கண்விழித்து பார்க்கும் காலை நேரம்
பறவைகளின் சப்தத்தின் ஊடே - என்னுள்
அழகாய் எட்டிப் பார்க்கும் அன்பு
காதலியுன் அழகிய நினைவுகள் .......

மௌனமாக உறக்கம் மயக்கம் தெளிந்து
கதிரவஒளியில் கலைந்து செல்லும் வேளையில்
மனக்கண்ணில் தெரியும் மங்கையும் நீதானடி
மயக்கும் காதலியே!...
எழிலான  உன் நினைவலை எழும்பும்
என் மனமும் ஒரு ஆழியே!!

சுடர்விடும் சூரிய ஒளி பூமியை
சுற்றி வரும் நேரத்தில் ! காதலிநீ
இருக்கிறாயடி என்  இதயத்தின் ஓரத்தில்!!
சந்தோஷ புன்னகை காட்டி....
உன் அன்பு கரங்களை நீட்டி....
ஆம் உனையே சுற்றிவரும் மனம்!
 உன்னினைவால் எனக்கு இன்று
நல்ல தினம்!!

மலர்கள் தன்னிதழை  விரித்து
மகிழ்ச்சியுடன் தலையாட்டும்- காதலி
உன் நினைவுகள் மட்டும்தானடி
எனக்குள் மகிழ்ச்சி ஊட்டும்.....

ரோஜா நீயாக இருந்தாலும்
பறிக்கப்படுவது என் மனம்தான் - ஆம்
அழகிய ரோஜாவாய் சிரிக்கிறாய்
அன்புகாட்டி இதயத்தை பறிக்கிறாய்.....

உன்பேச்சின்  இதமான மென்மை பனித்துளி...
உன்பேச்சின் இதமான உணர்வு தென்றல்.....
உன்னழகிய இதயத்தின் கதவுகள் சூரியஒளி...
உன்இன்முகம் நான்காணும் நாளது பௌர்ணமி.....

சுடும் பாலைவனத்தில் இருந்த எனக்கு
குளிரும் சோலைவனத்தில் இடம் கொடுத்தாய்...
இனிக்க இனிக்க பேசியென் மனதையும் எடுத்தாய்...
தென்றலுக்கு அடிப்படை மரம்!
காதலியுன் உறவுதானடி கடவுள்
எனக்களித்த வரம்!!
                           -கவிஅன்பு

மாசுபாடு




















"அழுக்கான எங்களை
குளிப்பாட்ட வாருங்கள் "
வான்மழை நோக்கி
நகரத்து மரங்கள்....
            - கவிஅன்பு.

Friday 29 August 2014

எறும்பின் கேள்வி














ஓ மனிதர்களே !
உயிர் காக்க உணவை தேடி
கூட்டமாய் அலைகிறோம் நாங்கள்...
உயிர் நீக்க நஞ்சை தேடி
கூட்டமாய் அலைவதேன் நீங்கள்?..
இப்படிக்கு எறும்புகள்...
--------------------------------
உணவை தேடும் எறும்பின் பயணம்!..
உயிர்கொல்லி தேடும் மனிதனின் பயணம்!!..
                     - கவிஅன்பு

மரம்















வானம் பார்த்த மரம் - அது
வளமையான பசுமையின் கரம்...
மனித வாழ்வுக்கு அதுவே நல் உரம்..
அதனால் உயரும் மாசற்ற
பூமியின் தரம் - அதை
வளர்ப்பதும் மிகசிறந்த அறம்....
மைந்தர்களை மட்டும் அல்ல
மரங்களையும் சேர்த்து வளர்ப்போம்..
மாசின்றி மண்ணினை காப்போம்......
                                      -கவிஅன்பு

தொடுவான எண்ணங்கள்
















சொல்லிவிடலாம் என்று உன்
அருகில் வரும்போதெல்லாம்
தயக்கத்தில்
தொடுவானமாய்  எனைவிட்டு
தூரமாய் செல்கிறதே
வார்த்தைகள்.......
              -கவிஅன்பு  

உதடுகள் உரசும் உன்னதநேரம்...
















வேண்டும் வேண்டும் என்று
மனம் சொல்லும்...
வேண்டாம் வேண்டாம் என்று
இதழ் சொல்லும் - உன்னை
இறுக்க அணைத்து  முத்தமிடும்
அந்த இனிய தருணங்கள்...
                       -கவிஅன்பு 

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


















கரி(யானை) முகம் கொண்ட கஜமுகனே - பூத
கணங்களுக்கு அதிபதியான கணபதியே...
வினைகள்தனை நீக்கும் விக்னேஸ்வரனே...
விதியின் கொடுமை போக்க நீயுமொரு அரணே...

ஏற்றம் பெறட்டும் எளியமக்கள் வாழ்வு
உனக்காய் ஏற்றப்பட்ட ஒளிரும் தீபம் போல....
துன்பஇருள் நீங்கி இன்பமது  வரட்டும்-நின்
இடது கையில் ஏந்திய இனிக்கும் லட்டு போல....

கல்லாமை நீங்கி கல்வியது வளரட்டும் - உன்
வலதுகை ஆயுதத்தின் வலிமையான கூர்மை போல....
வன்முறை மனம் நீக்கி அன்பு வாசமது பரவட்டும் -நின்
மறுகை தாங்கிய மாசற்ற மலர் போல...

துணையாய் வரும் தும்பிக்கையோனே!
மலரும் முன்னே மொட்டுகளில்
மதிமயங்கி தேன் தேடும்
மானம்கெட்ட மூடர்களை
மகிழ்ந்து நீயும் அழித்திடல் வேண்டும் !....
மதுவுக்கு அடிமையாகி குடும்ப
மகிழ்ச்சியதை தொலைக்கும்
மதிகெட்ட மனிதர்க்கு -நல்
அறிவை நீயும் அளித்திடல் வேண்டும் !!....

மனிதர்களை மட்டுமல்ல - இயற்கை
மரங்களையும் காத்துவிடு மகேசனே!...
இல்லையெனில் இன்று
உனக்கு அரச மரம் - நாளை
தெருவோர ஆண்டிமடம்.....
இருந்தாலும் நவில்கிறேன்  நன்றி உனக்கு
நான் வாழும் நகரத்தில் கூட வெட்டப்படாமல்
அங்கும் இங்குமாய் வாழும் அரசமரம்
அதீத ஆண்டவன் நம்பிக்கையால்..........

வேண்டியது எல்லாம் நடக்குமா தெரியாது..
எதிர்காலத்தை இம்மனித  மனமும் அறியாது...
உன்முகத்தில் இருப்பது தும்பிக்கை....
எனக்கு உன்மேல் சிறிது நம்பிக்கை...
கேட்டுவைத்தால் உன்னிடம் - மன
பாரம் குறையும் என்னிடம்...
அதனால் கேட்கிறேன் - வருங்காலத்தில்
நடக்குமா பார்க்கிறேன்...
                          - கவிஅன்பு 

Monday 25 August 2014

வாரியார் பிறந்தநாள்
















திருமுருக கிருபானந்த வாரியார்(ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்..
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்..

Thursday 14 August 2014

சுதந்திர தின வாழ்த்துக்கள்


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
















மீளாத நிலையில் மீனவர் பிரச்சினை...
கைவிடும் நிலையில் கச்சத்தீவு பிரச்சினை...
காலமெல்லாம் தொடரும் காவிரி பிரச்சினை..
முன்னேறி பதுங்கும் முல்லைபெரியார் பிரச்சினை..
இனத்தை அழித்த ஈழத்தமிழர் பிரச்சினை....
இருந்தாலும் நானுமொரு இந்திய(தமிழ)ன்....
சுவாசிக்க மூச்சுரிமை!போராட பேச்சுரிமை!!...
சும்மா வந்ததல்லவே சுதந்திரம்!!....
வாஞ்சி முதல் வஉசி வரை பெற்ற
துன்பத்தை யோசிப்போம்!..
இனமொழி  வேறுபாடு களைந்து
இந்தநாளை நேசிப்போம்!!....
அகன்றது அன்னியரின் தந்திரம்
அல்லல்பட்டு கிடைத்ததே சுதந்திரம்...
                                   -கவிஅன்பு

Sunday 3 August 2014

நண்பர்கள் தின நல்வாழ்த்து















நேரம்போக பேசி பிரியும்
நிமிட நட்பு வேண்டாம் !...
தூரம் இருந்தாலும் நெஞ்சம்
துடிக்கும் நட்பே வேண்டும் - மன
காயங்களை ஆறுதல் சொல்லி ஆற்றவும்...
துன்பவாழ்வில் உடனிருந்து கொஞ்சம் மாற்றவும்......
நல்லதோர் நட்பே நாளும் வேண்டும் ....

அன்பு செலுத்துவதில் அன்னையாய்
அக்கறை காட்டுவதில் தந்தையாய்
அதட்டி திருத்துவதில் ஆசிரியராய்
அழகானதோர் நட்பே அனுதினமும் வேண்டும்..

எழுத்து பிழைகள் நிறைந்த
என் வாழ்வெனும் ஏட்டை
எடுத்து சொல்லி திருத்தும்
எழிலான நட்பே என்றும்  வேண்டும்...
பிம்ப நிலவாய் பின் வருவதை விட
நிஜ விண்மீனாய் நிலைத்து வரும்
போலியற்ற  நட்பே புனிதமாய் வேண்டும்....