உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

உன்னால் பண்டிகை - கவிதை

உன்
கத்தி போன்ற
கூர்விழி கண்ணால்
என்னை காண்கிறாய் .....
கண்டேன்  ஆயுதபூஜை ..

நீ பார்க்கையில் 
என் மனதில் ஆயிரமாயிரம்
வர்ண விளக்குகள்
எரிந்து சுடர் விடுகிறது !
கண்டேன் தீபாவளி..
                          - கவிஅன்பு  

உன்னுடன் காதல்

இரவில் சத்தமின்றி
பூக்கள் பூக்கிறது ! என்
இதயமும் யுத்தமின்றி
உன்னிடம் தோற்கிறது !!

இருளை தின்று
கொண்டே அந்த
விடியல் புலர்கிறது !
இதயத்தை தின்று
கொண்டே இந்த
காதல் வளர்கிறது !!
               - கவிஅன்பு 

அவளுடன் காதல் - கவிதை

எண்ணிடலங்கா காட்சிகள்
எத்தனையோ கண்டாலும்
அத்தனையும் மறந்து போகிறது !
அவள் நினைவே இதயமென்று
அடியேன் வாழ்க்கையும் ஆகிறது !!

சிறு வட்டப்புள்ளி வைத்து
ஆரம்பித்த காதல் இன்று
வானம் கொள்ளா கோலமிடுகிறது !
மெல்லமெல்ல இதயம் உரசி
முழுமதி அவள் நினைவே
என் உயிரை தொடுகிறது  !!
         - கவிஅன்பு 

இயற்கையை ரசி

வயித்துல தொப்பையும்
மனசுல பாரமும் - நல்லா
வளந்துட்டேதான் இருக்கும்
வீட்டுக்குள்ள இருந்து
சாப்பாட்டை ருசிச்சா !

வயிறும் சமமாகும்
மனசும் சந்தோசமாகும்
வெளியில் சுற்றி திரிந்து
இயற்கை அழகை ரசிச்சா !!
              - கவிஅன்பு 

விரக்தி மனதை விடு - கவிதை

இளைஞனே!
உள்ளத்தில் ஒன்றை மட்டும்
வைத்து கொண்டு
உலகமே போலியென்று மனதில்
விரக்தி கொள்ளாதே !..
உண்மைகளும் உலவத்தான் செய்கின்றன
உறுதியான மனதைவிட்டு
நீ என்றும் உருமாறி
விலகி செல்லாதே !!
                         - கவிஅன்பு 

அவளோடு காதல் - கவிதை

எல்லாவற்றையும் மறைத்து வைக்க 
முடிந்த என்னால் உன் 
மீதுள்ள காதலை மட்டும் 
மறைக்க இயலவில்லையடி !
உன்னை பற்றிய சிந்தனைகளே 
தினம் தினம் என் 
மனதில் தோன்றும் - நல்
இன்ப தொல்லையடி ! !

ஒவ்வொரு வினாடி பொழுதும் 
இதயத்தில் உன் நினைவுகள்
நின்று கொண்டே இருக்கிறது !.. 
மெல்ல மெல்ல அதுயென்னை
மென்று  தின்றுகொண்டே இருக்கிறது !!
                                    - கவிஅன்பு


Saturday 1 October 2016

நட்பு பயணம்

உள்ளமெனும் கண்ணாடியை உடைக்கும் 
                          கயமைகொண்ட காம கற்களும்...... 
உணர்வுளை ஆழமாய் சிதைக்கும்  
                         துன்பமான  துரோக முட்களும்.......
இல்லாத பாதையில் இடைவெளியற்று 
                       தொடர்ந்து கொண்டே இருக்கும்.....
உனக்கும் எனக்கும் இடையேயான 
                       நட்பெனும் நீண்ட  நல்பயணம்  ! ! ..
                                                    - கவிஞர் கவிஅன்பு  

இன்றைய இளைஞன்

அடுத்ததெரு பூங்காவின்  இயற்கையை
                          ஆர்வமாய்  ரசிப்பதும் மறந்து,
அருகில் இருக்கும் இதயங்களை
                          அன்புடன் நேசிப்பதும் மறந்து  
இமைமூடாமல் பார்த்தே  - நல்
                          இதயத்தை கெடுக்கும் இந்த
இணையமே கதியென்று  இன்று
                         இருப்பதும் ஏனோ இளைஞர்களே? ......
                                              - கவிஅன்பு