உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

அவளுடன் காதல் - கவிதை

எண்ணிடலங்கா காட்சிகள்
எத்தனையோ கண்டாலும்
அத்தனையும் மறந்து போகிறது !
அவள் நினைவே இதயமென்று
அடியேன் வாழ்க்கையும் ஆகிறது !!

சிறு வட்டப்புள்ளி வைத்து
ஆரம்பித்த காதல் இன்று
வானம் கொள்ளா கோலமிடுகிறது !
மெல்லமெல்ல இதயம் உரசி
முழுமதி அவள் நினைவே
என் உயிரை தொடுகிறது  !!
         - கவிஅன்பு 

No comments: