உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

அவளோடு காதல் - கவிதை

எல்லாவற்றையும் மறைத்து வைக்க 
முடிந்த என்னால் உன் 
மீதுள்ள காதலை மட்டும் 
மறைக்க இயலவில்லையடி !
உன்னை பற்றிய சிந்தனைகளே 
தினம் தினம் என் 
மனதில் தோன்றும் - நல்
இன்ப தொல்லையடி ! !

ஒவ்வொரு வினாடி பொழுதும் 
இதயத்தில் உன் நினைவுகள்
நின்று கொண்டே இருக்கிறது !.. 
மெல்ல மெல்ல அதுயென்னை
மென்று  தின்றுகொண்டே இருக்கிறது !!
                                    - கவிஅன்பு


No comments: