எல்லாவற்றையும் மறைத்து வைக்க
முடிந்த என்னால் உன்
மீதுள்ள காதலை மட்டும்
மறைக்க இயலவில்லையடி !
உன்னை பற்றிய சிந்தனைகளே
தினம் தினம் என்
மனதில் தோன்றும் - நல்
இன்ப தொல்லையடி ! !
ஒவ்வொரு வினாடி பொழுதும்
இதயத்தில் உன் நினைவுகள்
நின்று கொண்டே இருக்கிறது !..
மெல்ல மெல்ல அதுயென்னை
மென்று தின்றுகொண்டே இருக்கிறது !!
- கவிஅன்பு
No comments:
Post a Comment