உள்ளமெனும் கண்ணாடியை உடைக்கும்
கயமைகொண்ட காம கற்களும்......
உணர்வுளை ஆழமாய் சிதைக்கும்
துன்பமான துரோக முட்களும்.......
இல்லாத பாதையில் இடைவெளியற்று
தொடர்ந்து கொண்டே இருக்கும்.....
உனக்கும் எனக்கும் இடையேயான
நட்பெனும் நீண்ட நல்பயணம் ! ! ..
- கவிஞர் கவிஅன்பு
No comments:
Post a Comment