உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 9 August 2015

ஆண்டவனிடம் அப்துல்கலாம்

ஆண்டவனிடம் அப்துல்கலாம் அக்னி நாயகன் அப்துல்கலாம் மறைவினை போன்று எந்த தலைவரின் இறப்பும் இந்த அளவு எல்லோர் மனதையும் வருத்தமடைய செய்திருக்காது.மக்கள் ஜனாதிபதி என்பது இவருக்கு மட்டுமே பொருந்த கூடிய வார்த்தை என்பது முற்றிலும் உண்மை.அப்துல்கலாமின் மறைவால் இதயத்தில் அதிர்ச்சியும் கண்களில் அழுகையும் கண்டிப்பாக அனைவருக்குமே இருந்திருக்கும்..விழுதுகள் வீழ்ந்தாலும் விதைகள் கண்டிப்பாய் முளைக்கும்.நமக்குள் அவர் விதைத்த நம்பிக்கை என்னும் விதை நம்மிடம் என்றும் நிலைக்க வேண்டும்.அக்னி நாயகன் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெறட்டும்..
 -கவிஅன்பு

No comments: