Monday 28 July 2014
புதுக்கவிதை (ஹைக்கூ )
Friday 25 July 2014
Saturday 19 July 2014
படித்ததில் பிடித்தது
டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..
" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே
செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப
வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "
" அப்ப கருப்பு ஆடு..?!! "
" அதுவும் என்னுதுதான்..!! "
" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "
Wednesday 16 July 2014
கண்ணதாசனுக்கொரு கவிதை..
முத்தையாவெனும் இயற்பெயரில் - எழில்
முத்துபோல் உதித்தவனே !....
கவிதைகளாய் எழுதி தமிழன்னையின்
கிரீடத்தில் - நவ
ரத்தினத்தை பதித்தவனே!!
சிறுகூடற்பட்டியில் பிறந்தாய்!
இலக்கிய சிந்தனையில் சிறந்தாய்!!
கஷ்டங்களை மறந்தாய்-எழுதுகோலினால்
கவிதைகளை கறந்தாய்!!
மூன்று மனைவி பெற்றாலும் நீ
முத்தமிழின் காதலன்தான் -ஆம்
உணர்வுகளில் அணைத்தாய் - நின்
உயிரோடு அல்லவா செந்தமிழை இணைத்தாய் ...
அர்த்தமுள்ள இந்துமதத்துடன்
அழகாய் ஏசுகாவியம் கொடுத்தாய்!...
மதங்கள் பொருட்டல்ல என்று
மனதினில் எண்ண வைத்தாய்!! ...
திருநீறுடன் நெற்றியில் பொட்டு வைத்தாய்!
மனித உணர்வுகளை பாடலில்
தொட்டு வைத்தாய்!!
சிக்காகோவில் மறைந்த சிந்தனை செல்வனே!..
கருத்தாழம் பொதிந்த உன்பாடல்
எம்மனதில் ஒலிக்கும் என்றும் செவ்வனே!!...
எமக்கு முன்பே நீ மறைந்துவிட்டாய்!
தமிழெனும் வானத்தில் நிலைத்த சூரியனாய்
நின் கவிதைகளை வரைந்து விட்டாய்.!!..
நிறை குடம் அது வழியாது - ஆசுகவி
நின் படைப்புகள் என்றும் அழியாது.....
-கவிஅன்பு
Monday 14 July 2014
தமிழை உச்சரிக்கும் முறை ('ழ' கரம்):-
உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று.
*பல்-பள்ளம்-பழம்*
ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)
'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)
'ழ்' என்னும் எழுத்துக்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்...
தாய் மொழியை சரியாக உச்சரிப்போம்...
தமிழ்பேசி விருந்தினரை உபசரிப்போம்....*
--கவிஅன்பு
Subscribe to:
Posts (Atom)