முத்தையாவெனும் இயற்பெயரில் - எழில்
முத்துபோல் உதித்தவனே !....
கவிதைகளாய் எழுதி தமிழன்னையின்
கிரீடத்தில் - நவ
ரத்தினத்தை பதித்தவனே!!
சிறுகூடற்பட்டியில் பிறந்தாய்!
இலக்கிய சிந்தனையில் சிறந்தாய்!!
கஷ்டங்களை மறந்தாய்-எழுதுகோலினால்
கவிதைகளை கறந்தாய்!!
மூன்று மனைவி பெற்றாலும் நீ
முத்தமிழின் காதலன்தான் -ஆம்
உணர்வுகளில் அணைத்தாய் - நின்
உயிரோடு அல்லவா செந்தமிழை இணைத்தாய் ...
அர்த்தமுள்ள இந்துமதத்துடன்
அழகாய் ஏசுகாவியம் கொடுத்தாய்!...
மதங்கள் பொருட்டல்ல என்று
மனதினில் எண்ண வைத்தாய்!! ...
திருநீறுடன் நெற்றியில் பொட்டு வைத்தாய்!
மனித உணர்வுகளை பாடலில்
தொட்டு வைத்தாய்!!
சிக்காகோவில் மறைந்த சிந்தனை செல்வனே!..
கருத்தாழம் பொதிந்த உன்பாடல்
எம்மனதில் ஒலிக்கும் என்றும் செவ்வனே!!...
எமக்கு முன்பே நீ மறைந்துவிட்டாய்!
தமிழெனும் வானத்தில் நிலைத்த சூரியனாய்
நின் கவிதைகளை வரைந்து விட்டாய்.!!..
நிறை குடம் அது வழியாது - ஆசுகவி
நின் படைப்புகள் என்றும் அழியாது.....
-கவிஅன்பு
No comments:
Post a Comment