உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 4 January 2018

பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு

கருது விளைஞ்ச விளை நிலம்
கொறஞ்சு போச்சு!
கல்லு முளைச்ச விலை நிலமா
எல்லாமே ஆச்சு!!
மாடுகள் எல்லாம் காணாம போகுது!
எந்திர மயமா எல்லாம் ஆகுது  !!
இயற்கை மாவு கோலமெல்லாம் மங்கிடுச்சு!
செயற்கை ஸ்டிக்கர் கோலம் வந்துடுச்சு!!
வாழ்த்து சொல்ல அட்டை இப்போ இல்ல!
வாட்ஸ்அப்ல எல்லாம் வந்துருச்சு மெல்ல!!
விவசாயத்துக்கு மாட்டையும் காணோம்!
விரும்பி பாக்க மனுஷனையும் காணோம்!!
விழாவுக்கு  அறுசுவை விருந்தோம்பல் அன்று!
மதுபானத்தை விரும்பி குடிக்கிறான் இன்று !!
பழையன கழிதல் புதியன புகுதலும்
என்பது இதுதானோ?
இறந்து கொண்டு இருக்கும் விவசாயமும்,
இன்புற்று மகிழ்ந்த எம் தமிழர் பண்பாடும்
வாழ்த்துக்களில் மட்டுமே இன்று
வார்த்தைகளாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறது போலும்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
                  -கவிஅன்பு

பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு

வந்தது தைத்திங்கள் - வாயெல்லாம்
இனிக்கட்டும் சர்க்கரை பொங்கல் !!
வாசலில் வண்ண கோலம் பூக்கட்டும் !
வான் கதிரவனும் வந்து பாக்கட்டும் !!
கரும்ப கடிச்சு சாப்பிடுவோம் -  அண்டை
வீட்டாரையும் விருந்துண்ண கூப்பிடுவோம் !!
பிரிவினை எண்ணத்தில் இருந்து விலகுவோம் !
சாதி மறந்து தமிழராய் நட்புடன் பழகுவோம் !!
விவசாயம் செய்பவர் உழவராம் - அவரே
நம்பசி போக்கும் உணவில் உள்ளவராம் !!
உழவர்களையும் மனதில் நினைப்போம் !
உறவுகளையும் அன்போடு அணைப்போம் !!
தித்திக்கும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துகள்..
- கவிஅன்பு

இரத்ததானம் கவிதை - Blood Donate kavithai
























                   
 - கவிஞர் கவிஅன்பு, உச்சிநத்தம்

Monday 1 January 2018

புத்தாண்டு வாழ்த்து கவிதை - கவிஅன்பு


புத்தாண்டு வாழ்த்து கவிதை - Happy New Year kavithai

இலக்கியம் படிக்க நேரமில்லை
இயற்கையை ரசிக்க நேரமில்லை !
நித்திரை தொலைத்து நினக்காய்
நெடுங்கவிதை ஒன்றெழுதி
புன்னகையுடன் வரவேற்கிறேன் - ஆங்கில
புத்தாண்டே உன்னை !....

நிமிடங்கள் எல்லாம் கடந்து புறப்பட்டு
பதினேழு உதிர்ந்து பூக்கும் நீ பதினெட்டு !..
இரவு நேரத்தில்தான் இருக்கும் உன் பிறப்பு ! -
மனதால் வாடும் மனிதரின் -பெருந்துன்ப
இருளை களைந்தால் உனக்கு வரும் சிறப்பு !!

மீத்தேனிலிருந்து முழுமை மீட்பு தந்து
நெடுவாசல் மக்களுக்கு நிம்மதி தந்திடு    !
கதிராமங்கலத்திற்கு களிப்பை தந்திடு !!
விளைநிலம் ஏமாற்றம் தந்து - அரசியல்
வியாபாரிகளும் ஏமாற்றம் கொடுக்க
விவசாயிகள் படும் வேதனைக்கு எல்லாம்
விடியல் ஒன்றை கொடுத்திடு  !

காவிரி,முல்லை நீரால்  தோன்றும்
கலகம்  இல்லாத காலத்தை கொடுத்திடு !
குடும்பத்தை கெடுக்கும் குடிதனை கொடுக்கும்
மதுபான கடையில்லா  மாநிலம் தந்திடு !
உள்நாட்டு கடற்படை கூட உயிர்வாங்கும்
மீனவர் வாழ்வுக்கோர் மீட்சி  கொடுத்திடு !

மரங்களை சாய்த்து மனிதனையும் சாய்க்கும்
ஓகி போன்ற புயலுக்கு  ஓய்வை கொடுத்திடு !
வந்தது நீட்டு(NEET )வாங்கியது ஓருயிரை கேட்டு
இதயம் நிறுத்தா இனிய கல்விநிலை கொடுத்திடு !
கீழடி அகழ்வாய்வு  கிடப்பில் போட்டு - தமிழுக்கும்
கீழான மொழியினை எல்லாம்  பலகையில் போட்டு
அருமை மொழியினை அழிக்க எண்ணும்
அவலம் மாறும் ஆண்டை கொடுத்திடு !

இன்பங்கள் தோன்றட்டும் திக்கெட்டு
சமத்துவம் சமாதானம் சகோதரத்துவம்
உருவாக்க வேண்டுமென்று புறப்பட்டு !
வருக வருக  நீ ரெண்டாயிரத்து பதினெட்டு !!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 -துள.கவிஅன்பு,
விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு,
தூத்துக்குடி.