உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 4 January 2018

பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு

வந்தது தைத்திங்கள் - வாயெல்லாம்
இனிக்கட்டும் சர்க்கரை பொங்கல் !!
வாசலில் வண்ண கோலம் பூக்கட்டும் !
வான் கதிரவனும் வந்து பாக்கட்டும் !!
கரும்ப கடிச்சு சாப்பிடுவோம் -  அண்டை
வீட்டாரையும் விருந்துண்ண கூப்பிடுவோம் !!
பிரிவினை எண்ணத்தில் இருந்து விலகுவோம் !
சாதி மறந்து தமிழராய் நட்புடன் பழகுவோம் !!
விவசாயம் செய்பவர் உழவராம் - அவரே
நம்பசி போக்கும் உணவில் உள்ளவராம் !!
உழவர்களையும் மனதில் நினைப்போம் !
உறவுகளையும் அன்போடு அணைப்போம் !!
தித்திக்கும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துகள்..
- கவிஅன்பு

No comments: