உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 21 November 2017

உருமாறும் மேகம் - கவிதை

அமர்ந்த இடத்தில் இருந்து
அசைந்து செல்லும்
அழகான  பெண்ணை பார்க்கிறேன் !..

தாடி வைத்த முதியவர்
தள்ளாடி போவதை 
தன்னிலை மறந்து பார்க்கிறேன் !.

காகம் போல ஒரு பறவை
கண் இமைக்கும் நொடியில்
பறந்து மறைவதை என்
கண்களால் பார்க்கிறேன் !

குதிரையோடு யானையும்
கூட்டமாய் வருவதை
குதூகலமாய் நானும் பார்க்கிறேன் !

இலைகளும் மரங்களும்
தோன்றி மறையும் காட்சியை
இமைகள் ஊடே பார்க்கிறேன் !

இன்னும் பல உருவங்கள்
இமைப்பொழுதில் மாறுவதை
இமைகள் இமைக்காமல்  பார்க்கிறேன்!

வீட்டுக்குள் அமர்ந்து வெளியில்
இத்தனையும் பார்க்க இயலுமோ
விந்தையாய் தோன்றுகிறதா ?
எப்படி சாத்தியம் என்று
எண்ணவும் தோன்றுகிறதோ ?

ஒன்றும் இல்லை
ஒற்றை சன்னல் திறந்து வைத்து
உயர தெரியும் வானை பாருங்கள்..

உருமாறி  செல்லும் மேகம்தனில்
உருவங்கள்  எல்லாம் தெரியும்..

மேக திட்டுகளின் உருமாற்றத்தில
கடவுள் உருவம் கூட
கண்ணில் தெரிந்து போகும்...
               - கவிஅன்பு ,உச்சிநத்தம்.
Related image

மனைவியின் மன உணர்வு - கவிதை

மது குடி
மனம் வருந்துவேன்...
ஆனாலும்
மனதால் உன்னை
ஏற்று கொள்வேன் !...

புகை பிடி ..
பிடிக்கவில்லை
எனக்கு என்றாலும்
புன்னகை ஏந்தி உன்னை
ஏற்று கொள்வேன் !..

உடல் காயம்
தோன்ற அடி.
வலித்தாலும்
மணித்துளிகளில் மறந்து
மார்போடு உன்னை
சேர்த்து கொள்வேன்  !

உள்ளம் வலிக்க
உதடுகளால்  வசை பாடு..
உரிமை உனக்கு உண்டென்று
ஊமையாகி போனாலும்
உயிராய் உன்னை நேசிப்பேன் !

ஊதாரியாக இரு..
உள்ளம் கலங்கும்..ஆனாலும்
உவகையுடன்
உன்னை உபசரிப்பேன் !..

நேரம் கடந்து வீட்டிற்கு வா..
நெருடல் மனதில் வரும்-எனினும்
நெஞ்சார உன்னை
அணைத்து விடுவேன்  !...

வேலை வேலை
என்று என்னை மறந்து விடு....
நெஞ்சு தவிக்கும் ஆனாலும்
நேசம் உன்னிடம் காட்டுவேன்  !...

வீட்டில் உதவிகள் செய்யாதெ...
விரக்தி தோன்றும் ஆனாலும்
விரல்களால் உன்  கரம் கோர்ப்பேன் !..

என்னதான் நீ
எப்படித்தான் இருந்தாலும்
கணவன் என்று உன்னை என்
கண்ணிமையில்  வைத்து கொள்வேனடா
இதோ ஒன்றை தவிர...

மனைவி நான் என்பதை மறந்து
மாற்று பெண்ணிடம் காதல் கொண்டால்
மணவாளன் உன்னை விரும்புவதை விடுத்து
மரணத்தையே முழுதாய்
என் மனமும் விரும்புமடா..
மறுபடி உன் மீது
காதல் எப்படி அரும்புமடா.....
கட்டிய என் கணவனே!
             -கவிஅன்பு,உச்சிநத்தம்

Related image

Saturday 11 November 2017

உச்சிநத்தம் கவிஅன்பு எழுதி,பாடிய திருமண வாழ்த்து பாடல்



உச்சிநத்தம் கவிஅன்பு எழுதிய திருமண வாழ்த்து பாடல் - குருநாதன்,மணிமேகலை தம்பதியருக்கான வாழ்த்து

Uchinatham Kavianbu in Thanthi TV news - உச்சிநத்தம் கவிஅன்பு தந்தி தொலைக்காட்சி செய்தியில்.

கவிஅன்பு டெங்கு விழிப்புணர்வு பாடல் - Kavianbu'S Dengue awarness song



உச்சிநத்தம் கவிஅன்பு எழுதி விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு வெளியிட்ட டெங்கு விழிப்புணர்வு பாடல் ..


Kavianbu in tamil one india news

உச்சிநத்தம் கவிஅன்பு  எழுதிய டெங்கு விழிப்புணர்வு பாடல் செய்தி தமிழ் ஒன் இந்தியா செய்திகள் இணையத்தில் வந்தது .அதன் இணைப்பு..

https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-ngo-s-new-initiative-dengue-awareness-298335.html

https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-ngo-s-new-initiative-dengue-awareness-298335.html?utm_source=article&utm_medium=gplus-button&utm_campaign=gplus-share



Wednesday 26 July 2017

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி

புன்னகை பூத்த மலரொன்று
பூமியில் விதைக்கப்பட்ட  நாள்..
கள்ளமற்ற மழலை ஒன்று
காணாமல் போன நாள் ...
அமைதியான ஏவுகணை ஒன்று
அனைவரையும் அழவைத்த நாள்..
அக்னி சிறகொன்று  பறந்து
ஆகாயத்தில் மறைந்த நாள் ..
இலக்கே கனவென்ற இமயம்
இதயம் விம்ம சரிந்தநாள் ..
தமிழன் பெருமையுற்ற தலைவன்
தவிக்கவிட்டு சென்ற நாள் ...
(அப்துல் கலாம்  இரண்டாம் ஆண்டு
நினைவு தினத்தில் அய்யா அவர்களை
 நினைவு கூறுவோம்)

Saturday 6 May 2017

மரம் வளர்ப்போம் கவிதை - கவிஅன்பு

மனிதனே சிந்திப்பாயா மரம் பற்றி...
மரம் வளர்க்க சொல்கிறேன் உன் கரம் பற்றி..      

குடம்குடமா தண்ணீரை  குடிச்சும் தாகம் தீரல !..
கோடையோட வெப்பமது கொஞ்சமும் மாறல !!
வெயிலுக்கு இளைப்பாற  மரமில்ல -ஆனாலும்  
மனுசனுக்கு மரம் வளர்க்க இங்க மனமில்ல !!

கண்ட இடங்களில் கட்டிடம் முளைத்து
கண்போன்ற மரங்கள் காணாமல் போனால்
கோடை வெப்பம் கொளுத்தாமல் - நம்மை
கொஞ்சவா செய்யும்? - பூமியின்
பச்சையை அழித்து பலவண்ணம் ஏந்துகிறோம்…
களைப்புடன் நடை ! கைகளில் வண்ண குடை !

மழை நீருக்கு மரங்கள்தானே  கருவானது !
அதை மெல்ல அழித்ததால் தெருவெங்கும்
குடிநீர் பஞ்சம்தானே இங்கு உருவானது !!...
மரம் கொன்று மழை வேண்டி இங்கே யாகங்கள்!
கலிகால மனிதரால் மரங்களோடு  சேர்ந்து
மறைந்து போகிறது வான் மழை மேகங்கள்!!

வறுத்தெடுக்கும் வானத்து சூரியனால்
வாடி போகிறது  தேகங்கள் !
வாசல்தோறும் குடிநீர் பஞ்சத்தால்
தணியாமல் நீளும்  மனித தாகங்கள் !!

கோடைக்கு இயற்கை  மரங்கள் அன்றி
குளிர்சாதன செயற்கையை  நீ நாடினால்
பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு
பாழாய் போயி விடும்  உன் உடல் !
உன் நலன் காக்கவும் உரிமையோடு
மரம் வளர்க்க சொல்லி நான்
வரைகிறேன் இந்த கவிதை மடல் !!.....

மரம் வளர்ப்போம் ..
மரமே நமக்கு கடவுளின் கொடை....
வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
மரமே பூமியின் பசுமை ஆடை
மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை?

வியர்வையில் குளிக்காமல்
நம் சந்ததி  தண்ணீரில் குளிக்க
மரங்களை வளர்த்து வைப்போம்
கட்டிடங்களை விட பூமியில் மர
விதைகளை அதிகம் விதைப்போம்....

இனியும் மரம் வளர்க்காமல்
சுயநல மனிதனாய்  பூமியில்  நீ
சுற்றி வந்தால் காணாமல் அழிந்து போவது
மரங்கள் மட்டும் அல்ல
வாட்டும் வெயில் தண்ணீர் பஞ்சத்தோடு
வறட்சியில் சிக்க போகும் உன்
வருங்கால சந்ததியும்தான்…
                  - கவிஞர்  கவிஅன்பு..



















Friday 5 May 2017

மரம் வளர்ப்போம் - கவிஅன்பு

ஒரு நாளுக்கு
ஒரு குடம் நீர் ஊற்றி
ஆளுக்கொரு மரம் வைத்து
அக்கறையோடு வளர்த்திருந்தால்...
குடம் நீருக்காய்
குழாயடியில் சண்டையிட்டு
குடிநீர் தேடி அலைந்து
விலை கொடுத்தாலும் கிடைக்காத
விந்தை நிலைதான் வருமா?
மழைக்கு ஆதாரம் மரம் !- அதை
இனியாவது  நடட்டும் நம் கரம் !! .....
                       -கவிஅன்பு

Tuesday 25 April 2017

நீரை சேமிப்போம் - SAVE WATER

பணம் பொருளை விட
எதிர்கால  சந்ததிகளுக்கு நாம்
சேர்த்து வைக்கும்
விலை மதிப்பற்ற செல்வம்
தண்ணீரே...
சிறுதுளியும் வீணாய் கீழே சிந்தாமல்
பொறுப்புடன் நீரினை சேமிப்போம் !
பொன்னான சந்ததிகளை காப்போம் !!..
   - கவிஅன்பு

நீரை சேமிப்போம் - save water

மண்ணின் பயிருக்கு மட்டுமல்ல
மனிதனின் உயிருக்கும் ஆதாரம்
நீர்தான் என்பதை நினைவோம்....
சேமித்து வைப்போம் நீரினை
செழிக்க வைப்போம் ஊரினையும்
விலை மதிப்பில்லா நம் உயிரினையும் ..
        - கவிஅன்பு.

Saturday 21 January 2017

ஜல்லிக்கட்டு கவிதை - i support jallikattu

காளை வருது பாரு துள்ளிக்கிட்டு !
தமிழன் என் அடையாளம் ஜல்லிக்கட்டு !!
என் அடையாளத்தை உன்னால
அழிக்கவும் முடியாது !..
பற்றியெரியும் போராட்டத்தை
தீர்வின்றி அணைக்கவும் முடியாது !!
              - கவிஞர் கவிஅன்பு