உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 5 May 2017

மரம் வளர்ப்போம் - கவிஅன்பு

ஒரு நாளுக்கு
ஒரு குடம் நீர் ஊற்றி
ஆளுக்கொரு மரம் வைத்து
அக்கறையோடு வளர்த்திருந்தால்...
குடம் நீருக்காய்
குழாயடியில் சண்டையிட்டு
குடிநீர் தேடி அலைந்து
விலை கொடுத்தாலும் கிடைக்காத
விந்தை நிலைதான் வருமா?
மழைக்கு ஆதாரம் மரம் !- அதை
இனியாவது  நடட்டும் நம் கரம் !! .....
                       -கவிஅன்பு

No comments: