உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 12 February 2018

எனதருமை மனைவியே !

எழிலான முக தோற்றம்
எண்ணி பார்க்க வைக்கும்
உடல் தோற்றம்  கொண்டு
எத்தனைதான் பெண்கள் இங்கு
ஏராளமாய் இருந்தாலும் - என்
அழகு அதனை பொருட்படுத்தாமல்
அன்பினால் உறவை வளர்த்து
அமிர்தமாய் சொற்கள் பேசி
நேசமதை நிறைவாக தந்து
பாசமதையே பண்பாக கொண்டு
விட்டுக் கொடுக்கும் குணமுடன்
வியப்புற என்னை வாழவைத்து
கஷ்டமோ நஷ்டமோ பகிர்ந்து
காலமெல்லாம் என்னுடன் வரும்
கனிவான மனைவிபோல் வருமா?
காலமெல்லோருக்கும் இப்படி தருமா?
நேசிக்கிறாய் மனைவியே நீயென்னை
நேசிப்பேன் காலமெல்லாம் நானுன்னை !
                             - கவிஅன்பு

No comments: