கருவது வளரும்போது கால்கள் அசைய
வயிற்றருகே வாய்வைத்து - அன்பு
வாஞ்சையுடன் பேசுவதும் ...
கனமான பொருளை தூக்காதே...
கால்கள் இடற நடக்காதே என்று
அக்கறையுடன் அன்னையிடம்
சொல்வதும்தான் - கருவின்
காதில்விழும் தந்தையின்
கனிவான முதல் சொற்கள் ....
மழலையாய் மண்ணில் உதித்தபின்
மடிதனில் தூக்கி வைத்து
மார்போடு சேர்த்து வைத்து
மகிழ்வோடு கொஞ்சிதலில் -தந்தையின்
அடுத்தடுத்த அன்பு சொற்களும்
ஆரம்பமாகி தொடர்கிறது !.....
கைபிடித்து காலூன்றி நடக்கையிலும்
கண்மண் தெரியாமல் விளையாடி திரிகையிலும்
பள்ளி கல்லூரியில் பாடங்கள் பயில்கையிலும்
அன்பான தந்தையின் அதட்டல் சொற்களில்
அக்கறையின் மிகுதியே அதிகம் இருக்கும் !
தவறுகள் செய்தால்
கனிவுடன் பேசுவாள் தாய் - திருத்த
கண்டிப்புடன் பேசுவார் தந்தை ..
கண்டிப்பென்பது வெறும் சொற்கள் அல்ல
கண்முன் தெரியும் பிள்ளையின் எதிர்காலமது !
வயிற்றருகே வாய்வைத்து - அன்பு
வாஞ்சையுடன் பேசுவதும் ...
கனமான பொருளை தூக்காதே...
கால்கள் இடற நடக்காதே என்று
அக்கறையுடன் அன்னையிடம்
சொல்வதும்தான் - கருவின்
காதில்விழும் தந்தையின்
கனிவான முதல் சொற்கள் ....
மழலையாய் மண்ணில் உதித்தபின்
மடிதனில் தூக்கி வைத்து
மார்போடு சேர்த்து வைத்து
மகிழ்வோடு கொஞ்சிதலில் -தந்தையின்
அடுத்தடுத்த அன்பு சொற்களும்
ஆரம்பமாகி தொடர்கிறது !.....
கைபிடித்து காலூன்றி நடக்கையிலும்
கண்மண் தெரியாமல் விளையாடி திரிகையிலும்
பள்ளி கல்லூரியில் பாடங்கள் பயில்கையிலும்
அன்பான தந்தையின் அதட்டல் சொற்களில்
அக்கறையின் மிகுதியே அதிகம் இருக்கும் !
தவறுகள் செய்தால்
கனிவுடன் பேசுவாள் தாய் - திருத்த
கண்டிப்புடன் பேசுவார் தந்தை ..
கண்டிப்பென்பது வெறும் சொற்கள் அல்ல
கண்முன் தெரியும் பிள்ளையின் எதிர்காலமது !
No comments:
Post a Comment