உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 27 June 2020

நிலா-குடம் கவிதை

குடம் கொண்டு நிலவொளி
பிடிக்க முயற்சி செய்தேன்...
 குடம் கொண்டு மேகநீர்
 நிரப்ப முயற்சி செய்தேன்..
 குடம் கொண்டு வானவில்வண்ணம்
தேக்க முயற்சி செய்தேன்...
முடியவில்லை-ஆனால்
காற்று மட்டும் அதனுள் புகுந்து
கண்ணாமூச்சி விளையாடியது
கவிதைக்கு அது போதும்..
கற்பனையில் சொற்கள மோதும்..

- கரிசல் கவியன்பு