குடம் கொண்டு நிலவொளி
பிடிக்க முயற்சி செய்தேன்...
குடம் கொண்டு மேகநீர்
நிரப்ப முயற்சி செய்தேன்..
குடம் கொண்டு வானவில்வண்ணம்
தேக்க முயற்சி செய்தேன்...
முடியவில்லை-ஆனால்
காற்று மட்டும் அதனுள் புகுந்து
கண்ணாமூச்சி விளையாடியது
கவிதைக்கு அது போதும்..
கற்பனையில் சொற்கள மோதும்..
- கரிசல் கவியன்பு
No comments:
Post a Comment