அமர்ந்த இடத்தில் இருந்து
அசைந்து செல்லும்
அழகான பெண்ணை பார்க்கிறேன் !..
தாடி வைத்த முதியவர்
தள்ளாடி போவதை
தன்னிலை மறந்து பார்க்கிறேன் !.
காகம் போல ஒரு பறவை
கண் இமைக்கும் நொடியில்
பறந்து மறைவதை என்
கண்களால் பார்க்கிறேன் !
குதிரையோடு யானையும்
கூட்டமாய் வருவதை
குதூகலமாய் நானும் பார்க்கிறேன் !
இலைகளும் மரங்களும்
தோன்றி மறையும் காட்சியை
இமைகள் ஊடே பார்க்கிறேன் !
இன்னும் பல உருவங்கள்
இமைப்பொழுதில் மாறுவதை
இமைகள் இமைக்காமல் பார்க்கிறேன்!
வீட்டுக்குள் அமர்ந்து வெளியில்
இத்தனையும் பார்க்க இயலுமோ
விந்தையாய் தோன்றுகிறதா ?
எப்படி சாத்தியம் என்று
எண்ணவும் தோன்றுகிறதோ ?
ஒன்றும் இல்லை
ஒற்றை சன்னல் திறந்து வைத்து
உயர தெரியும் வானை பாருங்கள்..
உருமாறி செல்லும் மேகம்தனில்
உருவங்கள் எல்லாம் தெரியும்..
மேக திட்டுகளின் உருமாற்றத்தில
கடவுள் உருவம் கூட
கண்ணில் தெரிந்து போகும்...
- கவிஅன்பு ,உச்சிநத்தம்.

அசைந்து செல்லும்
அழகான பெண்ணை பார்க்கிறேன் !..
தாடி வைத்த முதியவர்
தள்ளாடி போவதை
தன்னிலை மறந்து பார்க்கிறேன் !.
காகம் போல ஒரு பறவை
கண் இமைக்கும் நொடியில்
பறந்து மறைவதை என்
கண்களால் பார்க்கிறேன் !
குதிரையோடு யானையும்
கூட்டமாய் வருவதை
குதூகலமாய் நானும் பார்க்கிறேன் !
இலைகளும் மரங்களும்
தோன்றி மறையும் காட்சியை
இமைகள் ஊடே பார்க்கிறேன் !
இன்னும் பல உருவங்கள்
இமைப்பொழுதில் மாறுவதை
இமைகள் இமைக்காமல் பார்க்கிறேன்!
வீட்டுக்குள் அமர்ந்து வெளியில்
இத்தனையும் பார்க்க இயலுமோ
விந்தையாய் தோன்றுகிறதா ?
எப்படி சாத்தியம் என்று
எண்ணவும் தோன்றுகிறதோ ?
ஒன்றும் இல்லை
ஒற்றை சன்னல் திறந்து வைத்து
உயர தெரியும் வானை பாருங்கள்..
உருமாறி செல்லும் மேகம்தனில்
உருவங்கள் எல்லாம் தெரியும்..
மேக திட்டுகளின் உருமாற்றத்தில
கடவுள் உருவம் கூட
கண்ணில் தெரிந்து போகும்...
- கவிஅன்பு ,உச்சிநத்தம்.
