உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday, 28 October 2019

சுஜித்துக்கான கவிதை - poem for sujith


 ஒருநாள் உணவு வயிற்றுக்கு இல்லையேல்
 உயிர் வாடி துடிப்போம் நாங்களடா..
 அறுபத்து மணி நேரம் எப்படி
 அன்னம் தண்ணீ இல்லாமல் 
 இருக்கிறாய் நீயடா??

 பட்டாசு வெடித்து விளக்கு ஏற்றினாலும்
பார்வை எல்லாம் தெரிகிறது இருட்டாக..
காரணம் உன் நியாபகத்தால் எங்களுக்கு
தெரியவில்லை தீபாவளி ஒரு பொருட்டாக...

தொலை தூர சந்திரனை தொட்டு விடுகிறோம்..
தொடும் தூரத்தில் உன்னையோ
துடிக்க விடுகிறோம்...

 மீத்தேன்வாயு தோண்டி எடுக்கும்  நாட்டிலே
 பெரும் பாவி ஆவோம் - உன்னை
 மீட்டு எடுக்கவில்லை எனில்
 உயிரோடு உன்னை தூக்கி
 எடுக்கவில்லை எனில்...

மீண்டு வருவாயா..
மிகு மகிழ்வு தருவாயா...

உள்ளம் வாடி உன்னை
எதிர்நோக்கும்
தமிழகத்துடன்
#கரிசல் #கவியன்பு

#சுஜித் #sujith #prayerforsujith #poemforsujith #கவிதை #சோகம் #எதிர்நோக்கல்