உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 4 August 2019

பராசக்தி வசனம்


நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.

புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.
பூசாரியை தாக்கினேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.
கோவில் கூடாதென்பதற்காக அல்ல.
கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாதென்பதற்காக.
பூசாரியை தாக்கினேன்.
அவன் பக்தன் என்பதற்காக அல்ல.
பக்தி பகல்வேஷமாய் ஆகி விட்டதை கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்க பட்டேன்.
நேரடியாக பாதிக்க பட்டேன்.
சுயநலம் என்பீர்கள்.
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.
ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.
என்னை குற்றவாளி என்கிறார்களே.
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்.
படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன.
தென்றலை தீண்டியதில்லை நான்.
தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்.
பிறக்க ஒரு நாடு.
பிழைக்க ஒரு நாடு.
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
ரங்கூன் என் உயிரை வளர்த்தது.
உயந்தவன் ஆக்கியது.
திருமண கோலத்திலே இருக்கும் என் தங்கையை காண வந்தேன்.
மோசடி வழக்கிலே ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாளே இதோ இந்த ஜாலக்காரி ஜாலி.
இவள் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்.
பணப்பெட்டியை பறி கொடுத்தேன்.
பசியால் திரிந்தேன்.
மெலிந்தேன்.
கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக.
ஆம்.
கைம்பெண்ணாக.
தங்கையின் பெயரோ கல்யாணி.
மங்களமான பெயர்.
ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை.
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது.
கையிலே பிள்ளை.
கண்ணிலே நீர்.
கல்யாணி அலைந்தாள்.
கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்கு கருணை காட்டினார்கள் பலர்.
அவர்களிலே காளையர் சிலர் கைமாறாக அவள் காதலை கேட்டனர்.
கொலை வழக்கிலே சம்பந்த பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு.
இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை.
நான் தடுத்திறாவிட்டால் என் தங்கை அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள்.
ப்ரதி உபகாரமாக அவள் கடைகண் பார்வையை கேட்டு.
அவளில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி.
கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்.
பராசக்தியின் பெயரால்.
உலக மாதாவின் பெயரால்.
கல்யாணி உலகத்தில் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்.
அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த பூசாரிதான்.
தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்திலே விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை.
ஆதரவற்று தன் குழந்தை துடித்துச் சாவதை அவள் விரும்பவில்லை.
அவளே கொன்றுவிட்டாள்.
விருப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல.
உலக உத்தமர் காந்தி.
அஹிம்சா மூர்த்தி.
ஜீவகாருண்ய சீலர்.
அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லியிருக்கிறார்.
அது கஷ்ட்டமுறுவதை காண சகிக்காமல்.
அதே முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி.
இது எப்படி குற்றமாகும்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வதற்க்கு வழி இல்லை.
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்க்கு பாதுகாப்பில்லை.
என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்..
கோடீஸ்வரனின் வீட்டு பள்ளியறையிலே ஒருநாள்.
மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியில்லே ஒருநாள்.
இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
பகட்டு என் தங்கையை விரட்டியது.
பயந்து ஓடினாள்.
பணம் என் தங்கையை துரத்தியது.
மீண்டு ஓடினாள்.
பக்தி என் தங்கையை பயமுறுத்தியது.
ஓடினாள்.
ஓடினாள்.
வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.
வாழ விட்டார்களா என் கல்யாணியை.


வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை.
அதுவும் என் வழக்குதான்.
என் தங்கையின் வழக்கு.
தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு.
கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம்.
குழந்தையை கொன்றது ஒரு குற்றம்.
நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
கல்யாணியை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம்.
விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும், கல்யாணிகளும் குறைய போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.