உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday, 31 December 2014

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முன்பு பூத்த ஆண்டு(2014) உதிர்ந்தது!
இன்று புத்தாண்டு(2015)  மலர்ந்தது!!
இருள்நீக்கி விடியல் புலர்ந்தது!
இதயத்தில் மகிழ்ச்சி வளர்ந்தது!!

கிழித்து போட்ட நாள்காட்டியின்
தாள்களாய்
கீழ்மைக் குணங்கள் போகட்டும்!....
நல்ல எண்ணம்  விளையும்
தோட்டமாய்
மனித மனமது ஆகட்டும்!!

வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை..
அனுதினம் உணர்த்தும்
ஆணியில் அறையப்பட்ட காலண்டர்....
வலிகள் கடந்து நல் வழியில் நடந்து
வாழ்வில் வசந்தம் பெறுவோம்!...
உறவுகளுக்கு
இதயம் வருடும் இனிய அனுபவத்தையே
இவ்வருடம்(2015)  தருவோம்!!...