உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday, 29 June 2014

விடியல் தரும் காலை ...

பனித்துளியின் மீது பகலவன்
பார்வை படரும் நேரம்..........
அழகான பறவைகள் ஓசை எழுப்ப
அதிகாலை தொடரும் நேரம்............
சோம்பல் முறித்து காலை
சுகமாய் தெரிகிறது........
காணும் மனிதரில் எல்லாம் மெய்
அன்பே தெரிகிறது.......
அனைவருக்கும் விடியல் என்றுதான்
அதிகாலை இயம்புகிறதோ ?....
இருள் முடிந்து தொடங்கும் இனிய காலையாய்
வசந்தம் வரும் வாழ்க்கையிலும்.
வரவேற்க காத்திருப்போம் ..........

No comments: