Monday, 15 October 2018

கண்தானம் கவிதை

மூன்றாம் கண்
 என்பது சற்று 
 நீளமான ஒரு பொருள்.....
 கைகள் தாங்கி நிற்கும்
 ஒளியற்ற பொருள்....
 நடக்கையில் அடிக்கடி
 சப்தம் எழுப்பும் ....
 ஓரடி தூரம் மட்டுமே
 உணர்வை காண்பிக்கும்....
 ஆம் ! இருகண்ணில்
 பார்வை அற்றவருக்கு
 மூன்றாம் கண் என்பது
 ஒரு கை பிடிக்கும்
 கைத்தடிதானே தவிர
 இரு கை பிடிக்கும்
 ஒளிப்படக்கருவி(camera)அல்லவே !
 கண்தானம் செய்வோம்
 இந்நிலை  மாறவே !!
-கவிஅன்பு

No comments:

Post a Comment